முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானில் ஹக்கானி தீவிரவாத தலைவர்கள் 2 பேர் கைது

வெள்ளிக்கிழமை, 17 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

காபூல், அக்.18 - ஆப்கானிஸ்தானில் ஹக்கானி தீவிரவாத தலைவர்கள் 2 பேரை அந்நாட்டு ராணுவம் கைது செய்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தவிர ஹக்கானி தீவிரவாதிகளும், நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹக்கானி தீவிரவாதிகளின் 2 முக்கிய தலைவர்களை ஆப்கானிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ளது. அவர்களில் ஒருவர் அனாஸ் ஹக்கானி. இவர் ஹக்கானி அமைப்பன் நிறுவனர் ஜலாலுதீன் ஹக்கானியின் மகனாவார்.

இவர் வளைகுட நாடுகளில் பயணம் செய்து ஹக்கானி தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டி வந்தார். மற்றொருவர் பெயர் ஹபிஷ் ரஷீத். இவர் ஹக்கானி அமைப்பின் கமாண்டராக செயல்பட்டார். இவர் சமூக வளைதலங்கள் மூலம் பிரச்சாரம் செய்து ஹக்கானி அமைப்புக்கு ஆதரவு திரட்டி வந்தார். இவர்கள் இரண்டு பேரும் அதி பயங்கர தீவிரவாதிகள் என அறிவிக்கப்பட்டவர்கள்.

இந்த தகவலை ஆப்கானிஸ்தான் உளவு துறையின் தேசிய பாதுகாப்பு இயக்குநரான செய்தி தொடர்பாளர் ஹசீப் செதிக் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்