முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்

சனிக்கிழமை, 18 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

பூஞ்ச்,அக்.19 - ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நேற்றுமுன்தினம் இரவு அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதே போல கடந்த 24 மணி நேரத்தில் ஜம்மு மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் 4 முறை தாக்குதல் நடத்தினர்.

தானியங்கி இயந்திரங்கள் மற்றும் சிறிய ரக துப்பாக்கிகள் மூலம் இரவு 8.55 மணி அளவில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த தாக்குதல் நீடித்தது. இந்த மோதலில் இந்திய ராணுவ அதிகாரிகள் தரப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமீர்பூர் பகுதியில் கடந்த மூன்று தினங்களில் மூன்றாவது முறையாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி முதல் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பொதுமக்கள் குடியிருப்புகள் மீது நடத்திய தாக்குதலால் 8 பேர் பலியாயினர். மேலும் 62 பேர் படுகாயம் அடைந்தனர். இதன் அச்சம் காரணமால எல்லை கிராமங்களிலிருந்து வசிக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்