முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3.37 குறைந்தது

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக் 20 - டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியது.

சர்வதேச நிலவரத்துக்கேற்ப இந்தியாவில் டீசல் விலை நேற்று முன்தினம் நள்ளிரவு லிட்டருக்கு ரூ. 3.37 குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி செய்தியாளர்களிடம் கூறுகையில், சனிக்கிழமை(நேற்று முன்தினம்) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். மத்திய அரசின் இந்த முடிவை தொடர்ந்து சர்வதேச சந்தையில் நிலவும் விலைக்கேற்ப இந்தியாவில் டீசல் விலையை இனிமேல் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ளும். அதாவது மாதந்தோறும் லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டதற்கு பதிலாக சர்வதேச சந்தையில் நிலவரத்துக்கேற்ப டீசல் விலையை உயர்த்துவதா? அல்லது குறைப்பதா? என்பதை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்யும். கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்டது. அதற்கு பிறகு டீசல் விலை தற்போதுதான் குறைக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்கும் முடிவால் நன்மையை விட கெடுதலே ஏற்படும். இந்த முடிவால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்