முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் ஆட்சியில் அமர ஜெயலலிதாவுக்கு மேனகா வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக் 20 - அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என வாழ்த்தி மத்திய அமைச்சர் மேனகா காந்தி அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் எழுதியிருப்பதாவது,

தங்களுக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்து நான் ஆழ்ந்த வருத்தமடைகிறேன். உங்களுக்கு எப்போதும் எனது ஆதரவும் அனுதாபமும் உண்டு. உங்களுக்கு ஏதாவது என்னால் செய்ய முடியுமென்றால் அதை மகிழ்ச்சியுடன் செய்ய தயாராக இருக்கிறேன். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவோ அவதிப்பட்டு இருக்கிறீர்கள். அவற்றை ஒழுங்கு மற்றும் துணிச்சலோடு எப்போதும் சமாளித்தும் இருக்கிறீர்கள். இப்போது ஏற்பட்டுள்ள நிலைமையையும் நீங்கள் சமாளித்து வெற்றி கொள்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். மீண்டும் நீங்கள் ஆட்சி நிர்வாகத்திற்கு வருவீர்கள். காரணம், தமிழ்நாட்டுக்கு எவ்வளவோ நற்காரியங்களை நீங்கள் செய்திருக்கிறீர்கள். எனவே உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நாடு முழுவதும் உங்களுக்கு ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இவ்வாறு மத்திய அமைச்சர் மேனகா காந்தி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்