முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.எஸ்.ஆர். ராஜேந்திரனுக்கு மதுரை ஆதீனம் புகழாரம்

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2014      சினிமா
Image Unavailable

 

மதுரை, அக் 25 - எஸ்.எஸ்.ஆர். என தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்ற நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் திரை உலகிலும், தமிழ் இன உணர்வு பிரச்சாரங்களிலும் நிரந்தர இடம் பெற்றவர் என மதுரை ஆதீனம் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

லட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் நமது ஆதீனத்திற்கு மிகவும் நெருங்கியவர். அவர் நடித்த பல நாடகங்களில் சென்னையிலும், சென்னையை சுற்றியுள்ள பல இடங்களிலும் தாமும் மறைந்த சிறந்த நாடக நடிகர் எம்.ஆர்.முத்துசாமியும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தி இருக்கின்றோம்.

திரைப்படம் மூலமும் தனிப்பட்ட வகையிலும் அவர் தமிழ் சமுதாயத்திற்கு தமிழ் இன உணர்வுடன் அரும்பாடுபட்டவர். பலமுறை எமது மதுரை ஆதீனத்திற்கு நாடக நடிகர் எம்.ஆர். முத்துசாமி அவர்களோடு வருகை தந்து மிகுந்த பாச உணர்வுடன் பழகியவர். திரை உலகில் அவருக்கு தனி இடம் நிரந்தரமாகா அமைந்துள்ளது. புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்காக தமது உடல்நிலை மோசமாக இருந்த நிலையிலும் நடந்து வர முடியாத நிலையிலும் சென்னை நகரில் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து சிறப்பு செய்ததை எவராலும் மறக்க முடியாது. அவரது ஆன்மா சாந்தி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். மருதுபாண்டியர்கள் நினைவுநாளில் மறைந்த எஸ்.எஸ். ராஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு மதுரை ஆதீன சுவாமிகள் அந்த இரங்கல் செய்தியில் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்