முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருவ மழை: மேட்டூர் அணையில் நீர் திறப்பு நிறுத்தம்

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

மேட்டூர், அக்.26 - பருவ மழை தீவிரம் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப் பட்டு வந்தது. அதிகபட்சமாக விநாடிக்கு 21 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு, தற்போது, அணையில் இருந்து தண்ணீர் திறப்பு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு டெல்டா பாசனத்துக்கு, மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது டெல்டா மாவட்டங் களில் கனமழை பெய்து வருவதால் விவசாயப் பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. இதனால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago