எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, அக்.26 - தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களின் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களின் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு தலைமையில் நேற்று (25.10.2014) மடீட்சியா அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் 1594 பயனாளிகளுக்கு ரூ.43,20,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ பேசும்பொழுது தெரிவித்ததாவது:
தமிழக அரசால் தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (பணி முறைப்படுத்துதல் மற்றும் பணி நிலைமைகள்) சட்டம் 1982ல் இயற்றப்பட்டது. இதன்படி, இச்சட்டத்தின் இணைப்பில் உள்ள 69 தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சமூக பாதுகாப்பு நலத்திட்டம் வழியாக கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை மற்றும் விபத்து மரணம், விபத்து ஊனம் மற்றும் வயது முதிர்ந்த நிலையில் பாதுகாப்பிற்கென மாதாந்திர ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அமைப்புசாரா தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை தமிழகஅரசு வழங்கிவருகிறது. பதிவுபெற்றுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தமிழக அரசு, ஓய்வூதியத் தொகையினை ரூ.500லிருந்து ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கியுள்ளது. இது நாடு முழுவதிலுமுள்ள நல வாரியங்களால் வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையைவிட கூடுதலாகும்.
உயர்கல்விக்கான உதவித்தொகை கூடுதலாக ரூ.2000/- உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது. பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.6000/- மகப்பேறு உதவித்தொகை வழங்கப்படுகிறது. கருச்சிதைவுக்கான உதவித்தொகை ரூ.3000/- வழங்கப்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதில்லை. சட்டமன்ற விதி 110-ன்கீழ் கட்டுமான தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் விபத்தில் மரணமடைந்தால் தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.1,00,000/- என்பதை ரூ.5,00,000ஃ- என உயர்த்தி உதவித்தொகை வழங்குவதற்கும், 50 அல்லது அதற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்தால், அவ்விடத்தில் குழந்தைகள் காப்பகம் ஏற்படுத்தவும், கட்டுமான பணியாளர்களுக்கு 500 படுக்கைவசதியுடன் தங்குமிடம் ஏற்படுத்தித்தருவதற்கும், நடமாடும் மருத்துவமனை ஏற்படுத்தித்தரவும், கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களின் புதுப்பித்தல் காலம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற நடைமுறை இருந்து வந்தது. தற்போது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்துக்கொள்ளவும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, இயற்கைமரணம் மற்றும் விபத்து மரணம் உதவித்தொகை, விபத்துஊனம் உதவித்தொகை, ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள், உடலுழைப்பு நல வாரியம் மூலம் 571 பயனாளிகளுக்கு ரூ.18,22,750 மதிப்பிலும், ஓட்டுநர் நல வாரியம் மூலம் 192 பயனாளிகளுக்கு ரூ.3,94,750 மதிப்பிலும், கட்டுமான நலவாரியம் மூலம் 831 பயனாளிகளுக்கு ரூ.21,02,500 மதிப்பிலும் ஆக மொத்தம் 1594 பயனாளிகளுக்கு ரூ.43,20,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்புபிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.போஸ் (மதுரை-வடக்கு), கே.தமிழரசன் (மதுரை-கிழக்கு), எம்.வி.கருப்பையா (சோழவந்தான்), ஆர்.சுந்தர்ராஜன் (மதுரை-மத்தியம்), தொழிலாளர் இணை ஆணையர் வெ.இராஜா, மதுரை மாநகராட்சி துணை மேயர் கு.திரவியம், மாவட்ட ஊராட்சி தலைவர் மு.தர்மராஜா, மாமன்ற உறுப்பினர்கள் புதூர் அபுதாகீர், டி.ராமன், அரசு அலுவலர்கள் மற்றும் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் துணை ஆணையர் எம்.இராதாகிருஷ்ணபாண்டியன் வரவேற்புரையாற்றினார். தொழிலாளர் அலுவலர் (ச.பா.தி) (பொறுப்பு) பெ.சுப்பிரமணியன் நன்றியுரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்