முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசும்பொன் தேவர் படத்திற்கு ஜெயலலிதா மரியாதை

வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை, அக். 31 - பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் 107–வது ஜெயந்தி விழாவையொட்டி நேற்று பசும்பொன் தேவர் படத்திற்கு அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முத்துராமலிங்கதேவரின் 107–வது ஜெயந்தி விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

பசும்பொன் தேவரின் ஜெயந்தி விழாவையாெட்டி அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை அவரது படத்திற்கு அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ரோஜா மலர்களை தூவி வணங்கினார்.

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு தங்க கவசம் அணிவிக்க வேண்டும் என்று 2010ம் ஆண்டு ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று தேவர் சிலைக்கு 13 கிலோ தங்க கவசம் அணிவிக்க ஏற்பாடு செய்தார். கடந்த பிப்ரவரி மாதம் 9–ந்தேதி அன்று பசும்பொன் கிராமத்திற்கு ஜெயலலிதா நேரில் சென்று தேவர் சிலைக்கு அணிவிக்க 13 கிலோ தங்க கவசம் வழங்கினார். தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இப்போது தேவர் ஜெயந்தி விழாவையொட்டி தேவர் சிலைக்கு அந்த தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்