முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் தேவர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை

வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை, அக். 31 – பசும்பொன் தேவர் 107–வது ஜெயந்தியையொட்டி நேற்று சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அண்ணா தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

முத்துராமலிங்க தேவரின் 107–வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையையொட்டி சென்னை நந்தனம் அண்ணாசாலையில் உள்ள அவரது திருவுருவச்சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சிலையின் பீடத்தில் தேவரின் திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

நேற்று காலை 10 மணிக்கு அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அண்ணா தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன், நிர்வாகிகள் விசாலாட்சி நெடுஞ்செழியன், பொன்னையன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், வக்ப் வாரிய தலைவருமான அ.தமிழ்மகன் உசேன், வரகூர் அருணாச்சலம், அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ப.மோகன், பா.வளர்மதி, பழனியப்பன், தங்கமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செந்தில் பாலாஜி, எம்.சி.சம்பத், எஸ்.பி.வேலுமணி, எஸ்.கோகுல இந்திரா, டி.கே.எம்.சின்னையா, கே.டி.ராஜேந்திர பாலாஜி, எஸ்.சண்முகநாதன், எம்.எஸ்.எம். ஆனந்தன், தோப்பு வெங்கடாசலம், முக்கூர் சுப்பிரமணியம், கே.சி.வீரமணி, ஜெயபால், அப்துல் ரஹீம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மேயர் சைதை துரைசாமி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜக்கையன், மகளிர் அணி செயலாளர் சசிகலா புஷ்பா எம்.பி., அரசு கொறடா மனோகரன், அமைப்பு செயலாளர் செம்மலை, செல்வராஜ் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பி.கலைராஜன், ஜி.செந்தமிழன், கே.பி.கந்தன், கே.குப்பன், ராஜபாளையம் க.கோபால்சாமி, எம்.கே.அசோக், வைகை செல்வன், ஜே.சி.டி.பிரபாகர், ராஜலட்சுமி, முன்னாள் எம்.பி. முத்துமணி, முன்னாள் எம்.எல்.ஏ. சேலம் ரவிச்சந்திரன், ஜெயவர்த்தன் எம்.பி., கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், மாவட்ட செயலாளர்கள் விருகை வி.என்.ரவி, நா.பாலகங்கா, மாநகர போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.எஸ்.அஸ்லாம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஏ.ஏ.அர்ஜுனன், மாவட்ட மகளிர் அணி செயலாளரும், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவருமான சரஸ்வதி ரங்கசாமி, பகுதி செயலாளர்கள் டி.ஜெயச்சந்திரன், சைதை என்.எஸ்.மோகன், மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் ஆ.பழனி, கவுன்சிலர்கள் பி.சின்னையன், டி.சிவராஜ் பாண்டியன், வடசென்னை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.எம்.டி.ரவீந்திரஜெயன், ஏ.பிரபுராம், பேராசிரியர் கணேஷ் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் டி.மின்னல்ரவி என்கிற மின்னல்வாசன், மாவட்ட பேரவை இணை செயலாளர் எம்.இஸ்மாயில்கனி, டி.யூ.சி.எஸ். சீனிவாசன், வி.பி.ராஜேந்திரன், மயிலை ராஜேஷ்கண்ணா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தேவர் சிலைக்கு பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களும், கட்சி தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இளைஞர்கள் ஜோதி எடுத்து தொடர் ஓட்டமாக வந்து மரியாதை செலுத்தினார்கள்.

மூவேந்தர் முன்னணி கழகம்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 107–வது ஜெயந்தி விழாவையொட்டி சென்னை–நந்தனம் தேவர் சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பில் மலர் மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பாக பிரார்த்தனை செய்யப்பட்டது. மாநில துணை பொதுச் செயலாளர் இரா. பிரபு தலைமையில் சேப்பாக்கம் பகுதி இளைஞர் அணி செயலாளர் சுரேஷ், அண்ணா நகர் பகுதி செயலாளர் மகேந்திரன், முருகேசன், கார்த்திக், சிவக்குமார், சேது, மகளிர் அணி நிர்வாகி புவனா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தென்சென்னை மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் சு. திருநாவுக்கரசு தலைமையில் சூளை பள்ளத்தில் இருந்து சுமார் 200 வாகனங்களிலும் மத்திய சென்னை மாவட்டம் சார்பாக ஜாக்குவார் வி.யூ. நாதன் தலைமையில் அன்னதானமும், வடசென்னை மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் கே.எம். சங்கரபாண்டியன் தலைமையில் தண்டையார்பேட்டையில் அன்னதானமும் வழங்கப்பட்டது.அம்பேத்கர் முன்னணிக் கழகம்

சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் தேவர் சிலைக்கு அம்பேத்கர் முன்னணி கழகத் தலைவர் திண்டிவனம் ஸ்ரீராமுலு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அம்பேத்கர் மக்கள் கட்சி

அம்பேத்கர் மக்கள் கட்சியின் சார்பில் கட்சியின் நிறுவனர்–தலைவர் டாக்டர் ம. மத்தியாஸ் என்கிற சீனிவாசன் தலைமை அலுவலகத்தில் தேவரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிர்வாகிகள் பூவை. எஸ். பூவரசன், தண்டுரை அருண், பட்டாபிராம் மகேஷ், மோரை ஆறுமுகம், வேலூர் மணிகண்டன், சித்துக்காடு ராஜன், அப்பன் ராஜு, ராமு, கலைமணி, யுவராஜ், மலர், புவனேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தென் இந்திய பொது நல சங்கம்

சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் தேவர் திருவுருவச் சிலைக்கு தென் இந்திய பொது நலச் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.வி. ராஜேந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாவட்ட நிர்வாகிகள் வி. தங்கமணி, கே. ஆறுமுகம், எம். ஞானசேகர், ஏ.பி. கருணாகரன், புரட்சி ரவி, டாக்டர் பச்சைமால், என். ஏகாம்பரம், எச். லிங்கேசன், எம்.எஸ். பாவா, பி. ஜெயசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்