முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்புப் பணம் குறித்த விவாதத்துக்கு தயார்: மத்திய அமைச்சர்

செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - கருப்புப் பணம் குறித்த விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.
கருப்புப் பண விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி பாராளுமன்ற மக்களவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேற்று காலை, நாடாளுமன்ற பிரதான வாயிலை முற்றுகையிட்டு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மக்களவையில், 'கருப்புப் பணத்தை மீட்டு கொண்டு வாருங்கள்' என்ற வாசகம் எழுதப்பட்ட குடைகளை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் விரித்துக் காட்டியபடி கோஷங்களை எழுப்பினர். இதனால், அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்திற்குப் பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி, "கருப்புப் பணம் குறித்த விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்பதில் அரசு உறுதியுடன் இருக்கிறது" என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து