முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காப்பீட்டு சட்ட மசோதா திருத்தம்: அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம்

செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - காப்பீட்டு சட்ட மசோதா திருத்தம் குறித்த அறிக்கை தாக்கல் செய்வதற்காக, மாநிலங்களவை தேர்வு குழுவுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, டிசம்பர் 12 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தக் குழு நவம்பர் 28-ம் தேதியன்று தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. இந்நிலையில், நேற்று மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜெ.குரியன், காப்பீட்டு சட்ட மசோதா திருத்தம் குறித்த அறிக்கை தாக்கல் செய்வதற்காக, மாநிலங்களவை தேர்வு குழுவுக்கு கூடுதல் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
காப்பீட்டுத் துறையில் தற்போது உள்ள 26 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வெளியிட்ட தனது முதல் பொருளாதார அறிக்கையில் கூறப்பட்ட இந்த காப்பீட்டு மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனால் மசோதாவை தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை அடுத்து இந்த மசோதாவை தாக்கல் செய்ய அனைத்து கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியது. இருப்பினும் இதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்நிலையில், காப்பீட்டு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவை தேர்வுக் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
இந்தத் தேர்வுக் குழுவில் சந்தன் மித்ரா, முக்தர் அப்பாஸ் நக்வி, ஜகத் பிரகாஷ் நட்டா, ஆனந்த் ஷர்மா, பி.கே.ஹரிபிரசாத், ஜே.டி சலீம், சத்தீஷ் சந்திர மிஸ்ரா, கே.சி தியாகி, டெரெக் ஓ.பிரைன், மைத்ரேயன், ராஜீவ் சந்திரசேகர், நரேஷ் குஜ்ரால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து