முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில மனித உரிமை ஆணைய தலைவராக மீனா குமாரி பொறுப்பேற்றார்

செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - மாநில மனித உரிமை ஆணைய தலைவராக மீனாகுமாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக அரசு அறிவிப்பாணை பிறப்பித்தது.

இது குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பில், மேகாலய உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான மீனாகுமாரியை மாநில மனித உரிமை ஆணைய தலைவராக பணி நியமனம் செய்து தமிழக கவர்னர் ரோசய்யா உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் நேற்று காலை 11 மணியளவில் மீனாகுமாரி தலைவர் பொறுப்பை ஏற்றார்.
ஐதராபாத்தை சேர்நத மீனாகுமாரி, 2013 ஆம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி முதல் அதே ஆண்டு ஆகஸ்டு 3-ந் தேதி வரை மேகாலயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து