எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி - நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான நேற்றும், கருப்புப் பண விவகாரம் தொடர்பாக எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
நேற்று முன்தினம் மக்களவை தொடங்கியதும் திரிணமூல் காங்கிரஸ் உறுப் பினர்கள் அனைவரும் அவையின் மையப்பகுதிக்கு சென்று, ‘கருப்புப் பணத்தை திரும்பக் கொண்டு வா!’ என கோஷ மிட்டனர். அவர்கள் கைகளில் ‘கருப்புப் பணத்தை திரும்பக் கொண்டு வா’ என எழுதப்பட்ட குடைகளும் இருந்தன. இதைப் பார்த்த சபாநாயகர் சுமித்ரா மஹாஜன், “அவைக்குள் நடக்கும் போராட்டத்தில் குடைகளை காட்டும் முறை தவறானது” என்று கூறி எச்சரித்தார்.
இதை அவர்கள் பொருட்படுத் தாத நிலையில், அவர்களுடன், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்களும் இணைந்து போராட்டம் நடத்தினர். ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் கருப்புப் பணத்தை மீட்பதாக மோடி கூறியதை குறிப் பிட்டு அவர்கள் கோஷமிடத் தொடங்கினர்.
முன்னதாக, இந்த விஷயத்தில் பேசிய மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “கருப்புப் பண விவகாரத்தை விவாதிப் பதற்கு கேள்வி நேரத்தை ஒத்திவைக்கும்படி நோட்டீஸ் அளித்துள்ளோம். மக்களவை தேர் தலின்போது இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்கள் அனைவரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை விமர்சித்தனர். தாங்கள் அதை 100 நாட்களில் மீட்பதாக உறுதி அளித்தனர். அதை செய்யாத வர்கள் இப்போது மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.
இதே பிரச்சினைக்காக திரிண மூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாதி கட்சி சார்பில் சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்திருந்தனர். இவர்கள் அனைவருக்கும் மறுப்பு தெரிவித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், “இது விதிகளுக்கு முரணானது, அனைத்துக் கட்சிகளுடன் ஆலோ சனை நடத்தி வேறு விதிகளின் கீழ் கண்டிப்பாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்கிறேன்” என்றார்.
இது குறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசும் போது, “இதில் எதையும் மறைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. கடந்த 50 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு கருப்புப்பணம் காங்கிரஸ் ஆட்சியில் சென்றதே தவிர, எங்கள் ஆட்சியில் அல்ல. இந்த விஷயத்தில் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. கருப்புப் பண விவகாரத்தில் மத்திய அரசு பலவற்றை செய்திருக்கிறது” என்றார்.
இதற்கும் செவிசாய்க்காத உறுப்பினர்கள் கோஷமிட்டபடி அமளி செய்யவே, வேறு வழி யின்றி அவையை சபாநாயகர் ஒத்தி வைப்பதாக அறிவித்தார். கேள்வி நேரத்தில் எழுந்த இந்த அமளிக்கு இடையே இரண்டு கேள்விகள் எழுப்பப்பட்டாலும், அதற்கான பதிலை கேட்க முடியாத அளவுக்கு அவையில் கூச்சல் நிலவியது. எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அருகில் அமர்ந்திருந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஏதோ சொல்ல எழுந்தார். ஆனால் அமளி காரண மாக அது கேட்கவில்லை.
கருப்புப் பண விவகாரத்தை மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி கள் எழுப்பின. இங்கு அவை கூடியதும் ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எழுந்து கோஷமிடத் தொடங்கினர்.
திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் டேரக் ஓபிரயன் கூறும் போது, “கருப்புப் பணத்தை திரும்பக் கொண்டுவருவதாக அவைக்கு வெளியே மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால் அவ்வாறு கொண்டுவரவில்லை. இந்த விஷயத்தில் எதிர்பார்புகள் அதிகமாக உள்ளன. ஆனால் அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை. அரசு கட்டமைப்புகள் மீது விவாதம் அவசியமாகிறது” என்றார்.
இதற்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதில் அளிக்கும்போது, “மத்திய அரசும் இதன் மீது விவாதிக்க விரும்புகிறது. கட்சிகள் எப்போது விரும்பினாலும் கருப்புப் பண மீட்பு குறித்து பேசலாம்” என்றார். தொடர்ந்து நிலவிய அமளியால் மாநிலங்களவையும் ஒரு சிறிய இடைவெளிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இருஅவைகளும் தொடங்கு வதற்கு முன், நாடாளுமன்ற வளாக நுழைவாயிலிலும் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாயிலை மறித்து அமர்ந்தபடி போராட்டம் நடத்தினர். கைகளில் குடைகளுடன், “கருப்புப் பணத்தை திரும்பக் கொண்டு வா, மோடியின் அதிகாரப் போக்கை ஏற்கமாட்டோம்” என கோஷமிட்டனர். இவர்களுடன் ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் களும் இணைந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 18 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 19 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
18 Mar 2024பெஷாவர் : வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
-
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்க துறையின் சம்மனை புறக்கணித்தார் கெஜ்ரிவால்
18 Mar 2024புதுடெல்லி : டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முதல்வர் கெஜ்ர
-
புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
18 Mar 2024புதுடெல்லி : தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசின் முதல் 100 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
இளவரசி கேத் மிடில்டனின் உடல்நிலை பற்றி பரவும் தகவல் : டுவிட்டர் நிறுவனம் விளக்கம்
18 Mar 2024லண்டன் : இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனின் உடல்நிலை குறித்து பரவும் தகவலுக்கு டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி: புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
18 Mar 2024புதுடெல்லி, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.