முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்யசபையில் கனிமொழி பேச்சுக்கு அதிமுக கண்டனம்

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - தருமபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக ராஜ்யசபையில் அமளி ஏற்பட்டது.
மாநிலங்களவையில் பேசிய திமுக உறுப்பினர் கனிமொழி தருமபுரி அரசு மருத்துவமனையில் கடந்த 14 முதல் 22ஆம் தேதி வரை 16 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஊட்டச்சத்து குறைப்பாட்டினாலே குழந்தைகள் உயிரிழந்ததாக விளக்கமளித்ததை சுட்டிக் காட்டிய அவர், அப்படியென்றால் அரசு மகப்பேறு காலத்தில் வழங்கும் நிதியுதவி பெண்களுக்கு முறையாக சேரவில்லையா என கேள்வி எழுப்பினர்.
இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அவைத் தலைவர் இருக்கை அருகே வந்து கூச்சல் எழுப்பினர். மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜெ.குரியன், அதிமுக உறுப்பினர்கள் அமைதி காக்கும்படி பல முறை வலியுறுத்தினார்.
ஆனாலும் அவர்கள் தொடர்ந்து கண்டனக் குரல் எழுப்பியதால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து