முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் விடுதலை: ராஜபக்சேவுக்கு பிரதமர் நன்றி

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

காட்மண்டு - இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேருக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ததற்காக அதிபர் ராஜபக்சேவுக்கு, இந்திய பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
சார்க் அமைப்பு மாநாட்டில் பங்கேற்க நேபாளத் தலைநகர் காத்மாண்டுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கை அதிபர் ராஜபக்ச சந்தித்துப் பேசினார். அப்போது, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ததற்காக ராஜபக்சவுக்கு மோடி நன்றி தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக மோடி உங்களுக்கு நன்றி தெரிவித் தாரா என்று ராஜபக்சவிடம் பிடிஐ செய்தியாளர் கேட்டபோது, “நான் மோடியிடம் பேசும்போது, அவரின் வெளியுறவுக் கொள்கைக்குத்தான் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். அதனால்தான் மீனவர்களின் விடுதலை சாத்தியமானது என்று தெரிவித்தேன். இந்தியாவுக்கும், இலங்கைக் கும் இடையேயான நட்புறவு சிறப்பாக உள்ளது. சார்க் நாடுகளுக்கு பயனளிக்கும் வகையில் செயற்கைக்கோளை ஏவ இந்தியா முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது” என்றார்.
முன்னதாக மாநாட்டில் பேசிய மோடி, இலங்கையில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ராஜபக்சவுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே ஆகியோரை தனித்தனியே சந்தித்த பிரதமர் மோடி, பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பாக அவர்களுடன் பேச்சு நடத்தினார்.
மாநாட்டு மேடையில் 3 மணி நேரத்துக்கு மேல் இருந்தபோதும், நரேந்திர மோடியும், நவாஸ் ஷெரீப்பும் பேசிக்கொள்ளவில்லை. மேடையில் நவாஸுக்கும், மோடிக்கும் இடையே மாலத்தீவு மற்றும் நேபாளத் தலைவர்கள் அமர்ந்திருந்தனர். மாநாட்டு நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இருவரும் ஒருமுறைகூட ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை.
நவாஸ் உரையாற்றச் சென்ற போதும், திரும்பி வந்தபோதும் மோடியின் இருக்கையை கடந்து சென்றார். ஆனால், அவரை பார்த்து வணக்கம் தெரிவிக்கவில்லை. இருவரும் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து