முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலோர மாவட்டங்களில் நாளை முதல் மழை

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழ்நாட்டில் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் பெய்துவருகிறது. தென் மாவட்டங்களில் ஓரளவுக்கு பருவமழை பெய்துள்ளது. ஆனால் அந்த அளவுக்கு வடமாட்டங்களில் மழை பெய்யவில்லை. வடமாவட்டத்தில் மழை பெய்தால் தான் சென்னைக்கு குடிநீரை சப்ளை செய்யக்கூடிய ஏரிகள் நிரம்பும்.

வானிலை குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மண்டல அதிகாரி எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:-

இந்திய பெருங்கடலையொட்டியும் தென் மேற்கு வங்கக்கடலையொட்டியும் நிலவி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு வந்துள்ளது.

இதன் காரணமாக இன்று(வியாழக்கிழமை) தென்மாவட்டங்களில் சில இடங்களிலும் வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். படிப்படியாக மழையின் அளவு அதிகரித்து நாளை(வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும்.
சில இடங்களில் கனமழை பெய்யும். வடமாவட்டங்களிலும் மழை பெய்யும்.

சென்னையில் நாளை(வெள்ளிக்கிழமை) நாளை மறுநாளும் (சனிக்கிழமை) 28, 29 தேதிகளிலும் மழை பெய்யும்.

இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் பகலிலும் மேக மூட்டமாக உள்ளது. இரவில் பனிப்பொழிவு உள்ளது. அதன்காரணமாக திறந்தவெளியில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் , புல் மற்றும் தாவரங்களில் காலையில் பனியின் தாக்கம் இருந்ததை காணமுடிகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து