முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உளவாளி ஜாகிர் உசேன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல்

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - இலங்கையை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் இந்தியாவில் தங்கியிருந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் கியூ பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.

அவர் மீது உளவு பார்த்தது, கள்ளநோட்டு கடத்தல் உள்ளிட்ட எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது எட்டு வழக்கிலும் தான் குற்றம் செய்ததை ஜாகிர் உசேன் ஒப்புக்கொண்டதாக அரசு வழக்கறிஞர் பிள்ளை நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே பேட்டியளித்தார்.

ஜாகிர் உசேனிடம் கியூ பிரிவு போலீசார் நடத்திய விசாரணையை தொடர்ந்து சென்னை சாலிகிராமத்தில் தங்கியிருந்த இலங்கை தமிழரான அருண் செல்வராஜன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து