முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியின் வெளியுறவு கொள்கை: காஷ்மீர் முதல்வர் பாராட்டு

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் - பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவு கொள்கைகள் சிறப்பாக இருப்பதாக காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணி ஆட்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது அங்கு 5 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. ஆளும் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி தனியாக தேர்தலை சந்திக்கிறது. இதே போல் தேசிய மாநாட்டு கட்சியும், பாஜ மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்தனியாக களத்தில் உள்ளன. முதல் கட்ட தேர்தலில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். பிரிவினைவாதிகளின் தேர்தல் புறக்கணிப்பு கோரிக்கையை அவர்கள் நிராகரித்துள்ளனர். மொத்தமுள்ள 87 தொகுதிகளில் குறைந்தது 44 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் பாஜ பிரச்சாரம் செய்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி பல பொதுக்கூ ட்டங்களில் கலந்து கொண்டு பாஜ வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
ஜம்மு காஷ்மீரில் தற்போது உமர் அப்துல்லா முதல்வராக இருக்கிறார். அவரது தந்தை பரூக் அப்துல்லாவும் ஒரு காலத்தில் முதல்வராக இருந்துள்ளார். குடும்ப ஆட்சியை அகற்றி வளர்ச்சிக்கு வாய்ப்பு தர வேண்டும் என மோடி பிரச்சார கூட்டங்களில் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடியின் வெளியுறவு கொள்கை சிறப்பாக இருப்பதாக உமர் அப்துல்லா பாராட்டு தெரிவித்துள்ளார். அண்டை நாடுகளுடன் மோடி நல்ல உறவை பராமரித்து வருவதாகவும், வரவிருக்கும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்ள ஒப்புக் கொண்டிருப்பது மோடியின் மிக பெரிய சாதனை என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். அதே சமயம் காங்கிரசை ஒரு சந்தர்ப்பவாத கட்சி என்று கடுமையாக சாடினார். இதனால் தேர்தலுக்கு பின்னர் பாஜவுடன் உமர் அப்துல்லா கூ ட்டணி வைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து