முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை ஐயப்பன் கோவிலில் குவியும் வெளிநாட்டு பக்தர்கள்

வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

கொச்சி - சபரிமலைக்கு ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெளிநாடுகளிலிருந்தும், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பயணிகள், விமானம் மூலம் வருகின்றனர்.
அவர்களுக்கு வழிகாட்டும் வகையில் கொச்சி விமான நிலைய வளாகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்தானம், தனலட்சுமி வங்கி இணைந்து தொடங்கியுள்ள இந்த மையத்தை தேவஸ்தானத் தலைவர் எம்.பி.கோவிந்தன் நாயர் தொடங்கி வைத்தார்.
சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளி லிருந்து ஏராளமான பக்தர்கள் வருவதாகவும், அவர்களுக்கு உதவும் வகையில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கோவிந்தன் நாயர் கூறினார். தினமும் காலை 9 முதல் 10 மணி வரை செயல்படும் இந்த மையத்தில் பிரசாத கூப்பன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து