முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு

வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தமிழக பால்வளத் துறை அமைச்சர் ரமணா சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ரமணா சார்பில் மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 10-ஆம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அதில், ஆவின் முறைகேடுகள் குறித்து மக்களின் சந்தேகத்தைப் போக்க அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இது தினசரி நாளிதழில் வெளியானது.
இந்தத் தகவல் உண்மைக்குப் புறம்பானது. அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அறிக்கை வெளியிட்ட விஜயகாந்த் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து