முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்தி., எதிரான முதல் டெஸ்ட்: வாரியத்திற்கு கவாஸ்கர் வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

மும்பை - பிலிப் ஹியூஸ் மரணத்தை அடுத்து இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் மனநிலையில் வீரர்கள் நிச்சயம் இருக்க மாட்டார்கள் என்கிறார் சுனில் கவாஸ்கர்.
விளையாடுவது என்பது கடினம். இன்னும் ஒரு வாரம் இருக்கிறது, ஆனாலும் எந்த வீரரும் விளையாடும் எண்ணத்தில் இருக்க மாட்டார்கள். ஒருவருக்கும் விளையாடுவதற்கான மனநிலை இருக்காது. நியூசவுத்வேல்ஸ்-தெற்கு ஆஸ்திரேலியா போட்டி கைவிடப்பட்டது. ஆகவே முதல் டெஸ்ட் போட்டியை ரத்து செய்வதா வேண்டாமா என்பது பற்றி வாரியங்கள் கலந்து முடிவெடுக்க வேண்டும். பிலிப் ஹியூஸ் மரணம் ஆழமான துயரங்களை ஏற்படுத்துகிறது. எந்த ஒரு விளையாட்டு வீரர் பற்றியும் இத்தகைய செய்தியை எவரும் கேட்க விரும்ப மாட்டார்கள்.
அதுவும் பாதுகாப்பு கவசம் அணிந்திருந்தும் இது நடந்துள்ளது. இது ஒரு விபத்து, ஹியூஸ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஆஸ்திரேலிய கிரிக்கெட் சகோதரர்களுக்கும் எனது ஆழ்ந்த வருத்தங்கள். தலைக்கவசம் மறைக்காத பகுதியை பந்து தாக்கியுள்ளது தெளிவு. அது தமனியைத் தாக்க மூளைக்குள் ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதுதான் அவரை மரணத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. பொதுவாக இப்படி நடக்காது.
எந்த ஒரு வீரரும் மற்ற வீரர் இவ்வாறு அடிபட்டு சாய்வதை விரும்ப மாட்டார்கள். பவுன்சர் வீசிய சான் அபாட் நிச்சயம் மனம் உடைந்திருப்பார். அவருக்கு இது மிகவும் கடினமான நேரம், கிரிக்கெட் ஆஸ்திரேலியா அவருக்கு கவுன்சலிங் வழங்குவதன் மூலம் நல்ல காரியத்தை செய்துள்ளது. அது மட்டுமல்ல நியூசவுத்வேல்ஸ் அணி வீரர்கள் அனைவருக்குமே கவுன்சலிங் தேவைப்படும்.
காயத்தைக் கண்டு அஞ்சியிருந்தால் நான் வேகப்பந்து வீச்சாளர்களையே விளையாடியிருக்க முடியாது. அபாயம் இருப்பதாக நான் உணர்ந்ததில்லை. என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட் என்ற ஒரு ஆட்டத்தை விளையாடுவதை நான் பெரும் மகிழ்ச்சியாக கருதினேன். ஆனால் கொஞ்சம் வலி இருக்கத்தான் செய்யும் என்பதும் எனக்கு தெரியும்” என்றார் சுனில் கவாஸ்கர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து