முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசைக்காக அரசியலுக்கு வரக்கூடாது: குஷ்பு

சனிக்கிழமை, 29 நவம்பர் 2014      சினிமா
Image Unavailable

சென்னை - காங்கிரஸ் கட்சி மீது முழு நம்பிக்கை உள்ளதால் இங்கு இணைந்துள்ளேன். ஆசைக்காக அரசியலுக்கு வரக்கூடாது. உழைப்பதற்காக அரசியலுக்கு வரவேண்டும் என நடிகை குஷ்பு பேட்டியளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்பு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டிளித்தார்.
அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
தனது பேட்டியில் குஷ்பு கூறியதாவது: "காங்கிரஸ் கட்சி மீது முழு நம்பிக்கை உள்ளதால் இங்கு இணைந்துள்ளேன். ஆசைக்காக அரசியலுக்கு வரக்கூடாது. உழைப்பதற்காக அரசியலுக்கு வரவேண்டும். எனக்கு என்ன பதவி கொடுக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்திற்கு தெரியும். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபடுவேன். சாதி மத பேதமின்றி சேவை செய்ய காங்கிரசால் மட்டுமே முடியும். காங்கிரஸ் என்றுமே இலங்கை தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டதில்லை. ஆனால் இலங்கை தமிழர்களுக்கு எதிரான ஒரு கட்சி என்ற தோற்றம் உருவாக்கப்பட்டு இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக காங்கிரஸ் கட்சி இனி மூப்பனாரை முன்நிறுத்தாது என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து