முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே

புதன்கிழமை, 10 டிசம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. ரெயில்களின் விவரம் பின்வருமாறு:-

திருநெல்வேலி-சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்புரெயில் வருகிற 21-ந் தேதி இரவு 6.15 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

மறுமார்க்கமாக சென்னை எழும்பூர்-திருநெல்வேலி சிறப்பு ரெயில் வருகிற 22-ந் தேதி இரவு 10.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 12.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

திருநெல்வேலி-சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரெயில் வருகிற 25-ந் தேதி இரவு 9.15 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

மறுமார்க்கமாக சென்னை எழும்பூர்-திருநெல்வேலி சிறப்பு ரெயில் வருகிற 26-ந் தேதி இரவு 9.05 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து