முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் 22 நாளில் ரூ.77 கோடி வருமானம்

புதன்கிழமை, 10 டிசம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம் - சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல பூஜையையொட்டி கடந்த 17ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. முதல் நாளில் இருந்தே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். நேற்று முன்தினம் சபரிமலையில் வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் குவிந்திருந்தனர்.
இதனால் சுமார் 8 மணி நேரம் வரிசையில் காத்திருந்து அய்யப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நிலை நிலவியது. சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறந்தது முதல் கடந்த 8ம் தேதி வரை ரூ. 77 கோடியே 25 லட்சத்து 773 வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 22 நாட்களில் ரூ. 68 கோடியே 50 லட்சம் வருமானம் கிடைத்திருந்தது. தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் திரள்வதால் பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி அரவணை மற்றும் அப்பம் வழங்க தேவையான இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து