முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் தரிசனத்தை எளிமையாக்க தேவஸ்தானம் திட்டம்

வியாழக்கிழமை, 11 டிசம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

நகரி - திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இவர்கள் தரிசனத்துக்கு மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. சாதாரண நாட்களில் 10 மணி நேரமும், விடுமுறை நாட்களில் 36 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
பக்தர்கள் அவதிப்படுவதை தடுக்க தரிசன முறையை எளிமையாக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தரிசனத்தில் தற்போது உள்ள விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படுகிறது. தற்போது 300 ரூபாய் விரைவு தரிசனத்துக்கு கரண்ட் புக்கிங்கை ரத்து செய்து ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்யும் திட்டத்தை தேவஸ்தானம் அமல்படுத்தி உள்ளது. இதற்காக தினமும் 11 ஆயிரம் டிக்கெட் ஒதுக்கப்படுகிறது. இது 18 ஆயிரமாக ஒதுக்கப்படுகிறது.
மேலும் 300 ரூபாய் தரிசன டிக்கெட் பெற ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம், டெல்லி ஆகிய இடங்களில் உள்ள 81 தரிசன கவுண்டர்கள் மூடப்படுகிறது. தர்ம தரிசன பக்தர்கள், பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் நேரடியாக தரிசனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு இனி தரிசன நேரம் ஒதுக்கி டோக்கன் வழங்கப்படும். இதனால் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. குறிப்பிட்ட அந்த நேரத்தில் மட்டுமே பக்தர்கள் வந்தால் போதும். இதன் மூலம் அதிகபட்சம் 8 மணி நேரத்தில் தரிசனத்தை முடித்து விட்டு திரும்பி விடலாம். இந்த புதிய நடைமுறைகளை விரைவில் அமல்படுத்த தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து