முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் போலி ஏ.டி.எம். கார்டு தயாரிப்பு: சர்வதேச மோசடி கும்பல் கைது

சனிக்கிழமை, 13 டிசம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - ஆக்சிஸ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் கேரள மண்டலத்தின் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரி அசோக்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:

எங்கள் வங்கியின் பல்வேறு நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்களை திருடி, அதன்மூலம் போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து, லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்துள்ளனர். பொருட்களையும் வாங்கி இருக்கிறார்கள். சென்னையில் செயல்படும், சர்வதேச மோசடி கும்பல் இந்த செயலில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திட, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர் ஜெயசிங் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மீனாபிரியா, சங்கரேஸ்வரி, பார்வதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் போலி ஏ.டி.எம். கார்டு தயாரிப்பு முக்கிய குற்றவாளி, சென்னை மடிப்பாக்கத்தில் ஒரு வீட்டில் தங்கி இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு குறிப்பிட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். போலி ஏ.டி.எம். கார்டு தயாரிப்பு முக்கிய குற்றவாளியை அந்த வீட்டில் மடக்கிப்பிடித்தனர்.

அவரது பெயர் ஆனந்தன் என்ற ரூபன் (வயது 45). இலங்கையில் கொழும்பு நகரத்தைச் சேர்ந்த இவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் அந்த வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 4 ஆண்டுகளாக அவர் மடிப்பாக்கத்தில் அந்த வீட்டில் வாடகைக்கு வசிக்கிறார். பிளஸ்-2 வரை படித்துள்ள இவர் போலி ஏ.டி.எம். கார்டு தயாரிப்பதில் நிபுணர். இவர் ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு மதுரையில் போலி ஏ.டி.எம். கார்டு தயாரிப்பு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றுள்ளார்.

இவரது கூட்டாளிகள் ஸ்ரீதிசோக்குமார் (28), தினேஷ்குமார்(27), கிருஷ்ணதாஸ் என்ற முருகன் (52), தஸ்லின் (24) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தஸ்லின் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். மற்ற 3 பேர்களும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி ரூபனுக்கு வெளிநாடுகளில் நிறைய ஏஜெண்டுகளும், நண்பர்களும் உள்ளனர். அவர்கள் வெளிநாடுகளில் வாழும் வங்கி வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்களை திருடி, அவற்றின் தகவல்களை இணையதளம் மூலம் ரூபனுக்கு அனுப்பி வைப்பார்கள்.

ரூபன் அந்த ரகசிய தகவல்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து, எண்கோடர் எந்திரம் மூலம் போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்துள்ளார். பெரும்பாலும் ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களின் ரகசிய குறியீட்டு எண்களை பயன்படுத்தியே போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவர்கள் தயாரித்து வைத்திருந்த சுமார் 50 ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்டுகளை போலீசார் கைப்பற்றினார்கள்.

இந்த போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பல லட்சம் ரூபாய் பணத்தை ஏ.டி.எம். மையங்களில் இருந்து சுருட்டி உள்ளனர். அதன் மூலம் ஒரு இன்னோவா சொகுசு கார் வாங்கி இருக்கிறார்கள். அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் வைத்துதான் பெரும்பாலும், போலி கார்டுகளை தயாரித்துள்ளனர். மேலும் வீட்டு சமையலுக்கு தேவையான அரிசி மூட்டைகள் மற்றும் மளிகை சாமான்களும், துணிமணிகளும் வாங்கி இருக்கிறார்கள். மோசடி செய்த பணத்தை பங்கு போட்டு பகிர்ந்துள்ளனர்.

ரகசிய குறியீட்டு எண்களை அனுப்பி வைத்த வெளிநாட்டு ஏஜெண்டுகளுக்கும், தனது நண்பர்களுக்கும் பங்கு போட்ட பணத்தை ரூபன் அனுப்பி வைத்துள்ளார். இந்த மோசடி கும்பலைச் சேர்ந்த மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட போலி ஏ.டி.எம். கார்டுகள் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து