எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - ரஜினிகாந்த் 65-வது பிறந்தநாளை ரசிகர்கள் நேற்று முன் தீனம் உற்சாகமாக கொண்டாடினர். பிரதமர் நரேந்திரமோடி, கருணாநிதி, வைகோ, மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
‘சூப்பர் ஸ்டார்’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ரஜினிகாந்த் நேற்று முன் தீனம் 65-வது பிறந்தநாளை கொண்டாடினார். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு முதல் முறையாக அவரது பிறந்தநாளில் ‘லிங்கா’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
அதிகாலை 1 மணிக்கு ‘லிங்கா’ படத்தின் முதல் காட்சி சென்னை தியேட்டர்களில் திரையிடப்பட்டது. ரசிகர்கள் நள்ளிரவு முதலே கடும் குளிரையும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தியேட்டர்களில் கூடியிருந்தனர். அதிகாலை 1 மணிக்கு தியேட்டர்களில் கேக் வெட்டி ரஜினி பிறந்தநாளை கொண்டாடினார்கள்.
4 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் நேரடி படம் வெளியானதால் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் திரண்டு இருந்தது. இதனால் தியேட்டர்கள் திருவிழாக்கோலம் பூண்டு இருந்தது. தியேட்டர்களில் வைக்கப்பட்டு இருந்த ரஜினி பேனருக்கு ரசிகர்கள் பாலபிஷேகம் செய்தனர்.
பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிகாந்த்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், ரஜினிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நலமுடன், நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த டுவிட்டை அவர் தமிழில் பதிவு செய்து இருக்கிறார்.
பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் நிதின்கட்கரி ஆகியோரும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி தொலைபேசி மூலம் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் தனது முகநூலில், ‘ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தேன். சூப்பர் ஸ்டார் நீண்ட ஆரோக்கியமான வாழ்வை பெற வாழ்த்துவதோடு அவர் தொடர்ந்து இன்னும் பல ஆண்டுகள் தன்னுடைய ரசிகர்களை ஊக்குவித்து மகிழ்விக்க வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் இருந்த தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘தமிழகத்தின் ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்’ பார்ப்பதற்கும், பழகுவதற்கும் மிகவும் எளிமையானவர். அவருக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அவர் நீண்ட காலம் வாழ்ந்து, தொடர்ந்து தமிழகத்திற்கு தொண்டாற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர்கள் அமிதாப்பச்சன் டுவிட்டரிலும், கமல்ஹாசன் வீடியோ மூலமும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். லிங்கா படம் வெற்றி பெறவும் அவர் வாழ்த்தியுள்ளார். நடிகர் மோகன்லால், தனுஷ், நடிகை அசின் ஆகியோர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் பார்த்திபன் முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில், ரஜினிகாந்த் வீட்டுக்கு நள்ளிரவு 11.59 மணிக்கு போன் செய்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய், ரஜினிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ‘எனது ரசிகர்கள் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் சமூக வலைதளங்களில் இல்லை. அதனால் அவரது சார்பில் அவரது ரசிகர்கள் கவனித்து வரும் டுவிட்டர் கணக்கில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். லிங்கா வெற்றி பெற வாழ்த்துக்கள். நீங்கள் நலமுடன், மகிழ்ச்சியாக வாழ பிரார்த்திக்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனும் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.
ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடந்தது.
திருபோரூர் அருகில் உள்ள அனுமந்தபுரம் வீரபத்ரசுவாமி கோவிலில் மதிய உணவு 65 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலப்பன்சாவடி ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.