முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் ஜனவரி 1-ல் சொர்க்கவாசல் திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 14 டிசம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி - திருப்பதியில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.
திருமலையில் ஆங்கிலப் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் குறித்து தேவஸ் தான இணை நிர்வாக அதிகாரி நிவாச ராஜு தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் நிவாச ராஜு பேசும் போது, “இம்முறை ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று வைகுண்ட ஏகாதசியும் வருவதால், அன்றைய தினமே சொர்க்கவாசலும் திறக்கப்ப டுகிறது. மேலும் மறுநாள் வெள்ளிக் கிழமை துவாதசி என்பதால் இந்த இரு நாட்களிலும் லட்சக் கணக்கான பக்தர்கள் திரு மலைக்கு வருவார்கள். இவர்களுக்காக வி.ஐ.பி.க்கள், நன்கொடையாளர் கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர், கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர் போன்றோருக்கு வழங்கும் சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். மேலும் முன் பதிவுகளும் சிபாரிசு கடிதங்களுக்கு அனுமதியும் ரத்து செய்யப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து