முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேபரேலியில் பிற மதத்தினரை இந்து மதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சி

திங்கட்கிழமை, 15 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

லக்னோ - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் பிற மதத்தினரை இந்து மதத்துக்கு திரும்பவும் மாற்றும் நிகழ்ச்சிக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்துள்ளது.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் "தாய் மதத்துக்கு" திரும்ப அழைத்தல் என்ற பெயரில் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்களை இந்து மதத்துக்கு மாற்றும் நடவடிக்கைகளில் இந்து அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.
ஆக்ராவில் அண்மையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்து மதத்துக்கு திரும்பவும் அழைக்கப்பட்டதாக வெளியான செய்திகளால் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெற்றி பெற்ற ரேபரேலி லோக்சபா தொகுதியிலும் தாய் மதத்துக்கு திரும்ப அழைத்தல் நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கம் தெரிவித்துள்ளது.
அந்த இயக்கத்தின் ரேபரேலி மாவட்ட தலைவர் ஹரீஷ் சந்திரா சர்மா இது குறித்து கூறுகையில், 60 குடும்பங்கள் இந்து மதத்துக்கு திரும்ப தயாராக உள்ளனர். தாய் மதத்துக்கு திரும்பும் நிகழ்ச்சிக்கு சில கட்சிகள் மதச்சாயம் பூசுவதை ஏற்கமுடியாது என்றார். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும் இப்படியான நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து