முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயக்குநர் கே.பாலச்சந்தர் மருத்துவமனையில் அனுமதி

திங்கட்கிழமை, 15 டிசம்பர் 2014      சினிமா
Image Unavailable

சென்னை - பழம்பெரும் இயக்குநர் கே.பாலச்சந்தர் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலச்சந்தரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், மருத்துவமனைக்கு நடிகர் ரஜினிகாந்த் விரைந்துள்ளதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
84 வயதான இயக்குநர் பாலச்சந்தர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற விழைவுடன் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்களும் பிரபலங்களும் பதிவிட்டு வருகின்றனர். மேடை நாடகத் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்த கே.பாலச்சந்தர் 1965-ல் வெளியான நீர்க்குமிழி மூலம் இயக்குநராக அறிமுகமானார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய நடிகர்களை அறிமுகம் செய்தவர்.
மனித உறவுச் சிக்கல்களுடன் சமூகப் பார்வை கொண்ட எதிர் நீச்சல், சிந்து பைரவி, அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, வறுமையின் நிறம் சிகப்பு, புதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை உள்ளிட்ட படைப்புகளைத் தந்தவர். திரைப்படத் துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக, கே.பாலச்சந்தருக்கு 1987-ல் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும், 2010-ல் தாதா சாகேப் பால்கே விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து