முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ். அமைப்பை இந்திய முஸ்லிம்கள் ஆதரிக்கவில்லை: ராஜ்நாத்

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - ஐ.எஸ்.ஐ.ஸ். தீவிரவாத அமைப்பை இந்திய முஸ்லிம்கள் ஆதரிக்கவில்லை என பாராளுமன்ற கேள்வி நேரத்தின்போது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து லோக்சபையில் அவர் கூறியதாவது:
ஐ.எஸ்.ஐ.ஸ். தீவிரவாத அமைப்பை இந்திய முஸ்லிம்கள் ஆதரிக்கவில்லை. தங்கள் குழந்தைகள் ஐ.எஸ்.-க்கு ஆதரவாக செயல்படுவதையும் அவர்கள் ஊக்குவிப்பதில்லை. மேற்கத்திய நாடுகளில் பல சிறுபான்மை சமுதாயக் குடும்பங்களில் பெற்றோரே பிள்ளைகளை ஐ.எஸ்-ல் இணையுமாறு தூண்டிவருகின்றனர். இங்கு அவ்வாறு இல்லை. இதற்காக இந்திய முஸ்லிம்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் மிக சொற்ப அளவிலேயே இருக்கின்றனர். இணையத்தில் ஐ.எஸ். போன்ற அமைப்புகளுக்கு ஆதரவு உருவாவதை தடுக்க சிறப்பு கண்காணிப்புக் குழு விரைவில் அமைக்கப்படும். என்று விளக்கம் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து