முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி பிரணாப் திருப்பதி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

நகரி - ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரும் 26ம் தேதி திருப்பதி வருகிறார். முன்னதாக மேற்கு கோதாவரி மாவட்டம் பீமவரத்தில் உள்ள திருமலை தேவஸ்தான வேத பாடசாலையில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் ஹெலிகாப்டரில் ரேணுகுண்டா விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். மாலை 4 மணிக்கு திருமலை செல்கிறார். 5.30 மணியளவில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். இரவு திருமலையில் தங்கும் அவர் மறுநாள் காலை டில்லி புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி வருகையையொட்டி திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து