முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா மந்திரிசபையில் 6 புதிய மந்திரிகள் பதவியேற்பு

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

ஐதராபாத் - தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையில் 12 மந்திரிகள் உள்ளனர். நேற்று முதல் முறையாக மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 6 மந்திரிகள் பதவியேற்றார்கள். அவர்களுக்கு ஐதராபாத் கவர்னர் மாளிகையில் கவர்னர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய மந்திரிகளில் ஸ்ரீனிவாஸ் யாதவ், தெலுங்குதேசம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சமீபத்தில் டி.ஆர்.எஸ். கட்சியில் இணைந்தார். இதே போல் புதிய மந்திரியாக பதவியேற்ற நாகேஸ்வரராவ் முன்பு சந்திரபாபு நாயுடு மந்திரி சபையில் மந்திரியாக இருந்த அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி டி.ஆர்.எஸ். கட்சியில் சேர்ந்தார். இவர் சட்டசபை உறுப்பினராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து