முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலியான பாக்., குழந்தைகளுக்காக இந்தியப் மாணவர்கள் அஞ்சலி

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - பாகிஸ்தான் ராணுவப் பள்ளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான 132 குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசினார். ஷெரீபுடன் பேசியது தொடர்பான தகவல்களையும் மோடி ட்விட்டரில் பகிர்ந்தார்.
பாகிஸ்தானில் பலியான குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் 2 நிமிடம் அஞ்சலி செலுத்த வேண்டும் என்றார்.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 2 நிமிடம் மவுன அஞ்சலி கடைபிடிக்கப்பட்டது.
பாகிஸ்தானில், பயங்கரவாத தாக்குதலில் பலியான குழந்தைகள் உள்பட 141 பேருக்கும் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து