முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார் - ரயில் மோதல் 5 பேர் பலி

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

பாட்னா - பிகார் மாநிலத்தில், கார் மீது ரயில் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
நெவாதா மாவட்டம், சபிகஞ்ச் பகுதியில் ஆளில்லாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது ஹவுராவிலிருந்து கயா நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது.
இதில், காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி யானார்கள். மேலும் ஒருவர் மருத்து வமனையில் உயிரிழந்தார். படு காயமடைந்த 2 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். அவர்களின் உடல் நிலை, மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக போலீஸார் தெரி வித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் களின் குடும்பத்தினருக்கு பிஹார் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தின ருக்கு நிவாரண நிதியாக ரூ. 2.5 லட்சம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து