முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோயிலில் ஒரே நாளில் ரூ. 3.17 கோடி உண்டியல் வசூல்

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

நகரி - திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் அய்யப்பனை தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்கள். இதனால் விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
வார நாட்களில் சாதாரணமாக பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். அதே போல் உண்டியல் மூலமும் கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் வார இறுதி நாட்களை விட குறைந்த அளவில் பக்தர்கள் வரும் வார நாட்களில் உண்டியல் வருமானம் அதிகமாக உள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று பக்தர்கள் கூட்டம் திருப்பதி கோவிலில் குறைவாகவே இருந்தாலும் அன்று ஒரே நாளில் உண்டியல் வருமானம் ரூ. 3.17 கிடைத்துள்ளது. வார நாட்களில் அதிக அளவில் உண்டியல் மூலம் வருமானம் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து