முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவு – பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - மக்களின் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தபடி கூட்டுறவு மற்றும் பொதுத்துறையில் பணிபுரியும் சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு 25 சதவீத சிறப்பு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஊதிய உயர்வு அக்டோபர் முதல் தேதியிட்டு வழங்கப்படும்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:
தமிழ்நாட்டில் 43 சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 16கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளும் அடங்கும்.கூட்டுறவு மற்றும் பொதுத்துறையின் கீழ் உள்ள 18 சர்க்கரை ஆலைகளின்பணியாளர்களின் சம்பளம் மற்றும் படிகள் குறித்த ஒப்பந்த காலம் 31.03.2008 உடன்முடிவுற்றது.தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில்ஊதியக்குழுவின் ஊதியம் பெற்று வரும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வுவழங்குவது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் மேற்படிபணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க 09.05.2012 அன்று அறிவிப்புவெளியிட்டார். .
அவ்வறிவிப்பின் அடிப்படையில், நிலுவையில் இருந்த 10ரூஇடைக்கால நிவாரணத் தொகை 01.04.2008 முதல் கணக்கிடப்பட்டு மேற்படிபணியாளர்களுக்கு ஒரே தவணையாக வழங்கப்பட்டது. மேலும், அடிப்படைஊதியத்தில் 25ரூ சிறப்பு ஊதியமாக 01.04.2012 முதல் கூட்டுறவு மற்றும் பொதுத்துறைசர்க்கரை ஆலைகளின் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.தென்னிந்திய சர்க்கரை ஆலைகளின் சம்மேளனத்தின் உறுப்பினர்களாக உள்ளதனியார் சர்க்கரை ஆலைகள், தங்களது ஆலைகளில் உள்ள தொழிற்சங்கங்களுடன்08.10.2014 அன்று பேச்சு வார்த்தை நிறைவு செய்து ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.அந்த ஒப்பந்தம் 01.10.2014 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தொழில்துறை அமைச்சர் தங்கமணி முன்னிலையில், கூட்டுறவுமற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் அனைத்து தொழிற்சங்கங்களின்பிரதிநிதிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சர்க்கரையின் உற்பத்தி செலவு உயர்வு, விற்பனை விலை வீழ்ச்சி, கரும்பு வரத்துகுறைவு ஆகிய கடுமையான சூழ்நிலைகளை கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரைஆலைகள் சந்தித்து வருகின்றன. எனினும், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் 6061தொழிலாளர்களின்நலனைமுன்னிட்டு,தொழிலாளர்களின்கோரிக்கையைகனிவுடன்பரிசீலித்து கீழ்க்கண்ட வகையில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க அரசுமுடிவெடுத்துள்ளது. ஊதிய உயர்வு:தென்னிந்திய சர்க்கரை ஆலைகளின் சம்மேளனம் ஏற்படுத்தியுள்ள ஊதியஉயர்வு ஒப்பந்தப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு 1.10.2014 முதல்வழங்கப்படும். விதி எண் 110-ன்கீழ் 09-05-2012 முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பின்படி புதிய ஊதிய விகிதங்களில்அடிப்படை ஊதியத்தில் 25 விழுக்காடு சிறப்பு ஊதியமாக உயர்த்திவழங்கப்படும். கீழ்க்கண்டவாறு பல்வேறு பணிநிலைகளில் உள்ள பணியாளர்கள்ஊதிய உயர்வு பெறுவர்.
இதன்மூலம் மாதம் ஒன்றுக்கு உத்தேச பணப்பயன் ரூபாய் 1930/-முதல் ரூபாய்2397/-வரை பல்வேறுநிலையில்உள்ளதொழிலாளர்கள்ஊதியஉயர்வுபெறுவர்.நல்லெண்ணத்தொகையாக 1) ஆலைக்குடியிருப்பில் வசிக்கும் பணியாளர்களுக்கு ஒருமுறை தொகையாக) 01-10-2014 அன்று பணியில் இருப்பவர்களுக்குநல்லெண்ணத்தொகை (ழுடிடினறடைட ஹஅடிரவே) ரூ.5000/- வழங்கப்படும்.) ஆலைக்குடியிருப்பில் வசிக்காத பணியாளர்களுக்கு ஒருமுறைதொகையாக) 01-10-2014 அன்று பணியில்இருப்பவர்களுக்கு நல்லெண்ணத்தொகை ரூ.10000/- வழங்கப்படும்.
தென்னிந்திய சர்க்கரை ஆலைகளின் சம்மேளனத்தின் ஒப்பந்தக்கூறுகளில்உள்ளவாறு இதர படிகள் வழங்கப்படும்.என்.எம்.ஆர் தொழிலாளர்கள்: என்.எம்.ஆர் தொழிலாளர்கள்: என்.எம்.ஆர் தொழிலாளர்களுக்கு அன்ஸ்கில்டு மற்றும் செமிஸ்கில்டுதொழிலாளர்கள் பெறும் புதிய ஊதியத்தின் அடிப்படையில் ஊதிய நிர்ணயம் செய்துவழங்கப்படும்.நல்லெண்ணத் தொகையாக ரூ.5000/- வழங்கப்படும்.
இந்த ஊதிய ஒப்பந்த காலம் 01.10.2014 முதல் 30.09.2018 முடிய நான்குஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.தற்போது வழங்கிடும் ஊதிய உயர்வின் காரணமாக ஆண்டு ஒன்றிற்குகூடுதலாக ரூ.12.34 கோடி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும். இதைத் தவிரநல்லெண்ணத்தொகை ரூ. 4.63 கோடி உடனடியாக வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து