முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கன் வங்கியில் தற்கொலை தாக்குதல்: 10 பேர் பலி

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

காந்தஹார் - ஆப்கானிஸ்தானில் வங்கி ஒன்றில் தலிபான் தீவிரவாதிகள் நிகழ்த்திய தற்கொலை தாக்குதலில் 3 போலீசார் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
அந்த நாட்டின் ஹெல்மண்ட் மாகாண தலைநகர் லஷ்கர் கா நகரில் உள்ள நியூ காபூல் வங்கி கிளைக்கு ஐந்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் வந்தனர். வங்கியின் வாசல் பகுதியில் ஒரு பயங்கரவாதி தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்து பிற பயங்கரவாதிகளுக்கு வழியேற்படுத்தினார். அந்த வழியை பயன்படுத்தி நான்கு பயங்கரவாதிகளும் வங்கிக்குள் நுழைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினருடன் அவர்கள் துப்பாக்கி சண்டையில் ஈ டுபட்டனர். இந்த தாக்குதலில் 3 போலீசார் உட்பட 10 பேர் உயிரிழந்ததாகவும், 6 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 1 5 பேர் காயமடைந்ததாகவும் ஹெல்மண்ட் மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து