முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதலைப்புலிகள் மீதான விமர்சனம்: குஷ்பு வீட்டை முற்றுகையிட்டவர்கள் கைது

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2014      சினிமா
Image Unavailable

சென்னை - விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று விமர்சித்த நடிகை குஷ்புவை எதிர்த்து சென்னையில் அவரது முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற 50 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
\காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்பு. விடுதலை புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று விமர்சித்திருந்தார். . இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக தமிழர் முன்னேற்ற படை என்ற அமைப்பு அறிவித்திருந்ததுஇதையடுத்து பட்டினப்பாக்கம் சாந்தோம் நெடுஞ்சாலையில் லீத் கேசில் உள்ள நடிகை குஷ்பு வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குஷ்பு வீட்டுக்கு பாதுகாப்பாக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ரங்கபாஷ்யம், ராயபுரம் மனோ, சுமார் 50–க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கொடியுடன் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் உதவி கமிஷனர் ரவிசேகரன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் திரண்டு நின்ற காங்கிரஸ் கட்சியினரை கலைந்து செல்லும்படி கூறினர்.இதனால் போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்துக்கு பின்னர் அவர்கள் குஷ்பு வீட்டில் இருந்து சிறிது தூரம் தள்ளி மொத்தமாக நின்றனர்.
இதற்கிடையே நேற்று மதியம் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில் தமிழர் முன்னேற்றப்படையை சேர்ந்தவர்கள் திரண்டு முற்றுகையிட முயற்சித்தனர். அவரது கொடும்பாவியை எரித்தனர். சாலைமறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழர் விடுதலைப்படையை சேர்ந்த வீரலட்சுமி உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர். .போராட்டம் நடந்த போது வீட்டில் குஷ்பு இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக சத்தியமூர்த்தி பவன் முன்பு தமிழர் முன்னேற்ற படையினர் போராட்டம் நடத்திய போது அடிதடி, மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து