முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பன்றிக் காய்ச்சலுக்கு மூவர் பலி

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் - பன்றிக் காய்ச்சல் நோய்க்கு ஐதராபாத்தில் மேலும் ஒருவர் பலியானார். இத்தகவலை, காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் கே.சுபாகர் உறுதிப்படுத்தினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, "கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஹைதராபாத்தைச் சேர்ந்த இருவர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகினர். இந்நிலையில், காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் இருவர் புதன் இரவு பலியாகினர்.
ஒரே வாரத்தில் மூன்று பேர் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பலியாகியுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் தெலங்கானா பகுதியில் 8 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். தற்போது, 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் மேலும் பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து