முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவை கண்டித்து கும்பகோணத்தில் சரத்குமார் இன்று போராட்டம்

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் தமிழகம் முழுவதும் ‘மக்கள் தரிசனம்‘ என்ற பெயரில் மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டு வருகிறார்.

இதன்படி தமிழகம் முழுவதும் ஊர், ஊராக சென்று, கிராமங்களில் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டும், அதனை அரசின் மூலம் தீர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதற்காக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் மூலம் முன்கூட்டியே மக்கள் தரிசனம் செல்லும் இடங்களை தேர்வு செய்து, அதன்படி தனது சுற்றுப்பயணத்தை அவர் செய்து வருகிறார்.

தான் செல்லும் இடங்களில் அந்த ஊர் மக்களின் வாழ்க்கை தரம், தொழில், அடிப்படை பிரச்சினைகள், அவர்களின் தேவைகள் ஆகியவற்றை முழுமையாக அறிந்து, அதற்கேற்ப அவர்களின் வாழ்வை மேம்படுத்த அரசின் உதவி கிடைக்க என்ன செய்யலாம் என்பது குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இதுவரையில் அவர் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 22 கிராமங்களில் மக்கள் தரிசனம் நடத்தியுள்ளார். இங்கெல்லாம் மக்களின் வாழ்க்கை நிலை, பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அதற்கேற்ப நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளார்.

தற்போது, வருகிற ஜனவரி 3ந் தேதி முதல் 28ந் தேதி வரை பல்வேறு பகுதியில் மக்கள் தரிசனம் நிகழ்ச்சியை நடத்த உள்ளார். இதன்படி ஜனவரி 3–ந் தேதி அரியலூர் மாவட்டம், 4–ந் தேதி பென்னாடத்தில் கட்டுமான தொழிலாளர் மாநாட்டில் கலந்து கொள்கிறார். 7ந்தேதி வட சென்னை பகுதியில் மாவட்ட தலைவர் பிறந்தநாள் நிகழ்ச்சியிலும், 10ந் தேதி சென்னையில் நடக்கும் திருநங்கை நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்கிறார்.

14–ந்தேதி காரைக்குடியில் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார். 15–ந் தேதி திருவாடானையில் சமத்துவ பொங்கல், 18–ந் தேதி கோவை உபையது மகள் திருமண விழா, 19, 20–ந் தேதிகளில் கோபிசெட்டி பாளையத்தில் மக்களுடன் சந்திப்பு, 22, 23, 24 ஆகிய தேதிகளில் தென்காசி சட்டமன்ற தொகுதியில் மக்களை சந்தித்து மக்கள் குறைகளை கேட்கிறார்.

26ந்தேதி புளியங்குடி, 27ந்தேதி சங்கரன்கோவில், 28ந்தேதி கருத்தப்பிள்ளையூர் ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை அவர் கேட்கிறார்.

இதற்கிடையே, காவிரி ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை கண்டித்து கும்பகோணத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று (சனிக்கிழமை) நடத்தப்படுகிறது. இதில் கட்சியின் நிறுவனத்தலைவர் ஆர்.சரத்குமார் கலந்து கொள்கிறார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து