முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.யில் 8 சிறுவர்கள் கத்தியால் குத்திக் கொலை

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

மெல்போர்ன் - ஆஸ்திரேலியாவின் கேர்ன்ஸ் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஒன்றரை முதல் 15 வரையிலான வயதுடைய 8 சிறுவர்கள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர்.

அந்த குடியிருப்பில் இருந்து கத்தி குத்து காயங்களுடன் மீட்கப்பட்ட 34 வயது பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொல்லப்பட்ட சிறுவர்களிடையிலான உறவுமுறை குறித்த தகவல் ஏதும் இல்லை என்று போலீசார் தெரிவி்த்தனர். இருந்தாலும் அந்த சிறுவர்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள் எனவும் சிகிச்சை பெற்று வரும் பெண்மணி அவர்களது தாய் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து பிரதமர் டோனி அபோட் கூறுகையில், வார்த்தைகளால் விவரிக்க முடியாத கொடும் குற்றம் நடந்துள்ளது. இந்த செய்தியை கேள்வியுறும் ஒவ்வொரு பெற்றோராலும் வலியை உணர முடியும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து