முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 27ம் தேதி மண்டல பூஜை

ஞாயிற்றுக்கிழமை, 21 டிசம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

 

திருவனந்தபுரம் - பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 18ம் தேதி நடை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கோயில் நடை திறந்தது முதல் சபரிமலையில் பக்தர்கள் கூ ட்டம் அலைமோதுகிறது. இது வரை இல்லாத அளவுக்கு சபரிமலையில் இருமுடி கட்டிய ஐய்யப்ப பக்தர்கள் சரண கோஷம் முழங்க குவிவதால் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய நீண்ட வரிசை காணப்படுகிறது.

 

நேற்று முன்தினம் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்யவும் பிரசாதம் வாங்கவும் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. அன்று தங்க அங்கியில் ஜொலிக்கும் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகளவில் திரள்வார்கள். இதனால் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேவசம்போர்டு செய்து உள்ளது. சபரிமலை கோயில் பிரசாதமான அரவனை, அப்பம் போன்றவை தட்டுப்பாடின்றி பக்தர்களுக்கு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் பாதுகாப்புக்காக சபரிமலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பக்தர்கள் வரிசையை ஒழுங்குபடுத்தி 18ம் படியேறி சுவாமி தரிசனம் செய்ய உ தவி செய்து வருகிறார்கள். சபரிமலையில் பக்தர்கள் குவிவதால் கோவில் வருமானமும் அதிகரித்துள்ளது. கோயில் நடை திறந்த 23 நாட்களிலேயே சபரிமலை கோவிலின் மொத்த வருமானம் ரூ. 100 கோடியை தாண்டியுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து