முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் நாளை வாக்கு எண்ணிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 21 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் - ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் அதிகளவில் வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஜம்மு காஷ்மீர் , ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கியது. 5 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. ஜம்மு காஷ்மீரில் சராசரியாக 65 சதவீ த வாக்குகளும், ஜார்கண்டில் 66 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

தீவிரவாதிகள் அச்சுறுத்தலையும் மீறி இந்த தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் அதிகம் பேர் வாக்களித்துள்ளனர். இங்கு முதல் கட்ட தேர்தலில் 72, இரண்டாம் கட்ட தேர்தலில் 71, மூன்றாம் கட்ட தேர்தலில் 58, நான்காம் கட்ட தேர்தலில் 49 சதவீத வாக்குகள் பதிவாகின. நேற்ற முன்தினம் நடந்த இறுதிக்கட்ட தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் 3,4ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் அதிகம் பேர் வாக்களித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் நேற்று முன்தினம் கடும் குளிர் நிலவிய போதிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத அளவுக்கு வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த 2002ம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 43.09 சதவீதமும், 2008ல் நடந்த தே ர்தலில் 61.42 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று முன்தினம் நடந்த இறுதிக்கட்ட தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது. முதல்கட்ட தேர்தலில் 63.26 சதவீதம், இரண்டாம் கட்ட தேர்தலில் 68.01, மூன்றாம் கட்டத்தில் 63.96, நான்காம் கட்டத்தில் 64.63 சதவீத வாக்குகள் பதிவாகின. நேற்று முன்தினம் நடந்த 5ம் கட்ட தேர்தலில் 70.42 சதவீத வாக்குகள் பதிவாகின. சராசரியாக 66 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் அச்சுறுத்தல் உள்ளது. அதையும் மீறி அதிகளவில் இங்கு வாக்குப்பதிவு நடந்துள்ளது. பலத்த பாதுகாப்புக்கு இடையே நடந்த இந்த தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டதில் இருந்து நடத்தப்பட்ட தேர்தல்களில் தற்போது நடந்த தேர்தலில்தான் அதிகபட்ச வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த 2009ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலை காட்டிலும் 9 சதவீத வாக்குகள் அதிகம் பதிவாகி உள்ளன. இரு மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பாஜகவுக்கும் முக்கிய எதிர்க்கட்சியாக இருந்து வரும் முப்தி முகமது சயீத் தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சிக்கும் இடையே போட்டி நிலவி வருவதாகவும் இங்கு தொங்கு சட்டசபையே அமையும் எனவும் தேர்தலுக்கு பிந்தைய க ருத்துக்கணிப்புகள் தெரிவிக்கிறது. ஜார்கண்டில் பாஜ பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்றும், ஆளும் முக்திமோர்ச்சா 2ம் இடத்தை பிடிக்கும் எனவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து