முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை ஆசிரம பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

திங்கட்கிழமை, 22 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

புதுச்சேரி -  ஆசிரம பெண்களின் வார்டுகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து  வெளியேற்றப்பட்ட 5 பெண்கள் உட்பட 7 பேர் காலாப்பட்டு கடற்கரைக்கு சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் சாந்திதேவி, அருணாஸ்ரீ, ராஜஸ்ரீ உயிரிழந்தனர். புதுவை அரசு ஆஸ்பத்திரியில் பிரசாத், ஜெயஸ்ரீ, ஹெமலதா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் ஹேமலதா கடலில் குதித்து தற்கொலை செய்ய சென்ற போது சிலர் தன்னை கற்பழித்தனர் என்று புகார் கூறியிருந்தார். சிகிச்சை பெற்று வரும் 3 பேர் உள்ள  வார்டுகளுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு ப ணியில் ஈடுபட்டுள்ளனர். அரவிந்தர் ஆசிரமத்திற்கும் தொடர்ந்து 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆசிரமத்தை சுற்றிலும் தடுப்பு பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து