Idhayam Matrimony

வன வளர்ச்சி திட்டப்பணி செயலாக்கம் குறித்து ஆய்வு

திங்கட்கிழமை, 22 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு வனத்துறையில் உள்ள உயர் அலுவலர்கள் உடன் கலந்தாய்வு கூட்டம், தமிழக வனத்துறை அமைச்சர் .எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையின் கீழும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மைச் செயலாளர் .ஹன்ஸ்ராஜ்வர்மா, முன்னிலையிலும் நேற்றுமுதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறை தலைவர்) அலுவலகத்தில் உள்ள கிளக்ஹார்ன் கூட்ட அரங்கில் நடைபெற்றது.  மேற்காண் கூட்டத்தில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறை தலைவர்),
முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர்,
முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை திட்ட இயக்குனர், தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டம், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (ஆராய்ச்சி மற்றும் கல்வி) கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்கள், தலைமை வனப்பாதுகாவலர்கள் மற்றும் வனப்பாதுகாவலர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.
2. இக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் 2014-15 ஆம் நிதியாண்டில் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரப்படும் பல்வேறு
வன வளர்ச்சி திட்டப்பணிகளின் செயலாக்கத்தினை குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டார்கள்.  குறிப்பாக, தமிழ்நாட்டின் பசுமைப் போர்வையினை அதிகரிக்க 2013-14 மற்றும் 2014-15 ஆம் ஆண்டில் ரூ.49.18 கோடி மதிப்பீட்டில் மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களில் 66 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் மாபெரும் மரம் நடவுத்திட்டத்தின் முன்னேற்றங்கள் குறித்து விரிவான ஆய்வினை செய்து திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்துவது தொடர்பாக அறிவுரைகள் வழங்கினார். 

 3.  மேலும், 2014 ஆம் ஆண்டு வனத்துறை மானியக்கோரிக்கையின் போது மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால்  விதி 110 ன்கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், நிதியமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை அறிவிப்புகள் மற்றும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் மீது உரிய அரசு ஆணைகளைப்பெற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், அறிவிப்புகளில் கண்டுள்ள பணிகளின் தற்போதைய செயலாக்க நிலை குறித்தும் கலந்தாலோசித்தார்கள். அனைத்து திட்டங்களை முனைப்புடன் மேற்கொள்ள துரித நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும் என திட்ட செயலாக்க அலுவலர்களை அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

4. மேலும், வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் வன உயிரினங்களால் மக்களுக்கு ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்த உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், வனஉயிரினங்களுக்கு வனப்பகுதியில் நீர்வள ஆதாரங்களான மேம்படுத்தும் வகையில்  காப்புக்காடுகளில் தடுப்பணைகள், கசிவுசீர் குட்டைகள், நீர் தேக்கத் தொட்டிகள், நீர்துளைகள்,  குடிநீர்வசதிகள் செயற்கை நீர் வள ஆதார அமைப்புகள் ஏற்படுத்துதல், ஆழ்துளைக்கிணறுகள் அமைத்தல், வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர் வாழ்விடங்களில் குடிநீர்வசதிகள் மற்றும் ஏற்கனவே, ஏற்படுத்தப்பபட்ட தடுப்பணைகள், கசிவுநீர்குட்டைகள், நீர்தேக்கத் தொட்டிகளை பராமரித்து மேம்படுத்துதல், வன உயிரினங்களால் மக்களுக்கு உண்டாகும் இன்னல்களைக் களைவது குறித்தும் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளவும் மண்டல அலுவலர்களுக்கு வனத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள். மேலும், வனப்பகுதியில் மரத் திருட்டு, வன விலங்கு வேட்டை, வனநில ஆக்கிரமிப்பு போன்ற வனக்குற்றங்கள் நிகழாதவாறு விழிப்புடன் களப்பணியாளர்கள் கண்காணிக்கவும் அறிவுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து