முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு 2 போர்க் கப்பல்கள் ஏற்றுமதி

திங்கட்கிழமை, 22 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா - இலங்கைக்கு 2 போர்க் கப்பல்களை இந்தியா ஏற்றுமதி செய்ய உள்ளதாக பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் மொரிசீயசுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது தொடர்பான விழா கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் இந்தர்ஜித் சிங்,
2 ஆழ்கடல் ரோந்து கப்பல்களுக்கான ஒப்பந்தங்களை இலங்கை கொடுத்துள்ளது. இந்த கப்பல்கள் கோவா கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த கப்பல்கள் முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தால் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன என்று கூறினார். மத்திய அமைச்சரின் இந்த தகவல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து