முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெருமாள் கோயில்களில் ஜன. 1ல் பரமபதவாசல் திறப்பு

வியாழக்கிழமை, 25 டிசம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை - பெருமாள் கோயில்களில் ஜனவரி மாதம் 1ம் தேதி பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெற்று வருகிறது. வரும் 31ம் தேதி முடிய 10 நாட்கள் பகல் பத்து உற்சவம், ஜனவரி 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை ராப்பத்து உற்சவமும் நடைபெறுகிறது.
ஜனவரி 1ம் தேதி வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெறுகிறது. மூலவருக்கு புஷ்பங்கி சாத்தப்பட்டு காலை 4 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அன்று இரவு 7.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. ஜனவரி 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை தினமும் இரவு 7.15 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்படும். மதுரை அருகே உள்ள அழகர்கோயில், திருமோகூர் கோயில் மற்றும் தல்லாகுளம் பெருமாள் கோயில்களில் ஜனவரி 1ம் தேதி காலையில் பரமபதவாசல் திறக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து