முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வுடன் எந்த பேச்சும் நடத்தவில்லை: உமர்

வெள்ளிக்கிழமை, 26 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

ஜம்மு - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைக்க பாஜக-வுடன் தேசிய மாநாடு பேச்சு வார்த்தைகள் நடத்தியது என்ற செய்திகளை உமர் அப்துல்லா மறுத்துள்ளார்.
தேர்தலில் 15 இடங்கள் வென்ற தேசிய மாநாடு, 25 இடங்கள் வென்ற பாஜக-வை ஆதரித்து ஆட்சியமைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக செய்திகள் எழுந்தன.
ஆனால், உமர் அப்துல்லா இதனை மறுத்துள்ளார்:
“பாஜக-தேசிய மாநாடு பேச்சு வார்த்தைகள் பற்றி நிறைய கதைகள் புழங்கி வருகின்றன. நான் வலிமையாகக் கூறுகிறேன், அப்படிப்பட்ட உடன்பாடோ, பேச்சுவார்த்தைகளோ நடைபெறவில்லை.” என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து