முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 26 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக சாதகமான சூழல் இருப்பதால் மீனவர்கள் ஆழ்கடலு க்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு அதிக மழை பொழிவை தருகிற வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கி பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
சென்னையை பொருத்தமட்டில் நேற்று வானம் பிரகாசமாக காணப்பட்டது. மழைக்கான அறிகுறிகள் எதுவும் இன்றி காலையிலிருந்து வெயில் அடித்தது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென் கடலோர மாவட்டங்களை தவிர்த்து பிற பகுதிகளில் வழக்கமான வறண்ட வானிலையே காணப்படும். சென்னையை பொருத்தமட்டில் வானம் பிரகாசமாக காணப்படும். நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. ஆகையால் 3 நாட்கள் திட்டமிட்டு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
புதிதாக உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறுவது குறித்து அதன் இயக்கத்தை வைத்துதான் சொல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து